மாணவிக்கு பாலியல் வன்கொடுமை திருச்சி வடக்கு மாவட்ட அதிமுகவினர் போராட்டம். மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை திருச்சி வடக்கு மாவட்ட அதிமுகவினர் போராட்டம். மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலிய,ல் கொடுமைகள், சீண்டல்களை தடுக்க தவறியதை கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறியதை கண்டித்தும் தி.முக அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்சோதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி, ஆர் மனோகரன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் என.ஆர். சிவபதி, இணைச் செயலாளர் பொன். செல்வராஜ், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன்,பேரவை செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ், எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய்,மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவழகன்,
இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் முத்து கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், இளைஞரணி தேவா ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக், சமயபுரம் ராமு, சமயபுரம் டி.கே. கார்த்திக், பாசறை சோனா விவேக் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக அரசுக்கு எதிராக கண்டார கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்