சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 89வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சியில் தினத்தந்தி அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் வழக்கறிஞர் பிரிவு சுப்பிரமணி மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியநாதன் மார்க்கெட் மாரியப்பன் வக்கீல் சிவகாமி சுக்ருதீன் மற்றும் பலர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.