அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதி தாலுகா மருத்துவமனையின் அவலம். இரவு நேரங்களில் டாக்டர் இல்லாமல் அவசர சிகிட்சைக்கு வரும் நோயாளிகள் உயிர் இழக்கும் அபாயம். 

அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதி தாலுகா மருத்துவமனையின் அவலம். இரவு நேரங்களில் டாக்டர் இல்லாமல் அவசர சிகிட்சைக்கு வரும் நோயாளிகள் உயிர் இழக்கும் அபாயம்.

கன்னியாகுமரி மாவட்டம்  திற்பரப்பு பேரூராட்சியில் இன்று உண்ணீர் கோணம் பகுதியில் இரவு 7.45 மணி அளவில் நடந்த சாலை விபத்தில் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது இரவு டாக்டர் பணியில் இல்லாததால் பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது வரை எந்த உயர் அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு வராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அமைச்சரின் சொந்த தொகுதி தாலுகா மருத்துவமனையின் அவலம் சிரிப்பாய் சிரிக்கும் முன் உடனடி நடவடிக்கை தேவை என்கிறார்கள் அந்த பகுதி சமூக ஆர்வ்லர்கள்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்