மாரடைப்பால் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காலமானார். எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்.
மாரடைப்பால் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காலமானார். எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்.
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் தங்கவேல் என்கிற பிரின்ஸ் தங்கவேல். இவர் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை முசிறி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தார். ஒன்றிய கழக செயலாளராகவும், மாவட்ட கழக செயலாளராகவும் பதவி வகித்தவர்.
தற்போது, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அவைத்தலைவராகவும் பதவி வகிக்கின்ற *பிரின்ஸ் தங்கவேல்* மாரடைப்பால் இன்று காலமானார். பிரின்ஸ் தங்கவேல் இறப்புக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.