உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை மீறி கனிமவள கடத்தல்…. சமூக போராளி தீக்குளிப்பு போராட்ட அறிவிப்பு :
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை மீறி கனிமவள கடத்தல்….
சமூக போராளி தீக்குளிப்பு போராட்ட அறிவிப்பு :
மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கேரளாவுக்கு கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தி செல்லப்படுகின்றன. இதை மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் தான் சமூகப்போராளியும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட பொருளாளரான, பிரம்மநாயகம் என்பவர் வரும் வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தன்னுயிரை கொடுத்தாவது தீக்குளிப்பேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளவர், அனைத்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் என்ற வேண்டு கோளையும் வைத்துள்ளார்.
தென்காசி மாவட்ட நிர்வாகம் என்ன செய்யபோகிறது?