திருச்செந்தூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்
திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலு மூலைக் கிணறு பகுதியைச் சேர்ந்த தங்க பெருமாள் மகன் சதீஷ் 33 இவர் பணிக்க நாடார் குடியிருப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி பணிபுரிந்து வந்தார். சதீசுக்கு திருமணமாகி 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது டூவீலரில் பள்ளிக்கு சென்று பணிகளை முடித்துவிட்டு பரமன்குறிச்சி வழியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கீழ நாலு மூனைக்கு நேர் பகுதியில் வரும்போது மாடு குறுக்கே வரவே நிலை தடுமாறிய ஆசிரியர் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் சதீஷின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர். அதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து
அப்போது கீழ நாலு மூனைக்கு நேர் பகுதியில் வரும்போது மாடு குறுக்கே வரவே நிலை தடுமாறிய ஆசிரியர் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் சதீஷின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர். அதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து
திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.