திருவானைக்கோயில் மேல கொண்டையம்பேட்டை  ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் உறியடித் திருவிழா. மற்றும் சிறப்பு ஆராதனை.

 

திருவானைக்கோயில் மேல கொண்டையம்பேட்டை  ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் உறியடித் திருவிழா. மற்றும் சிறப்பு ஆராதனை.

திருச்சி திருவானைக்கோயில்
மேலக்கொண்டயம்பேட்டைபகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேணுகோபாலசுவாமி
திருக்கோவிலில் கோகுலாஷ்டமி முன்னிட்டுகாலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றன. பிறகு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை காட்டப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நேற்று சனிக்கிழமை அன்று இரவு உறியடிதிரு
விழா வழக்கம் போல் சிறப்பாக நடைபெற்றது.  திருவானைகோயில்
சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

விழா முடிவில் பங்குஏற்ற அனைவருக்கும் ‌பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நடை முறை நிர்வாகி வாசுதேவன் மற்றும் உரியடி வகைறாக்கள் செய்து இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்