சிவகங்கை கானூர் கண்மாயில் தண்ணீர் இல்லை. உள்ளிருப்பு போராட்டம் நடத்த போவதாக. விவசாயிகள் எச்சரிக்கை.
சிவகங்கை கானூர் கண்மாயில் தண்ணீர் இல்லை. உள்ளிருப்பு போராட்டம் நடத்த போவதாக. விவசாயிகள் எச்சரிக்கை.
சிவகங்கை மாவட்டத்திலேயே பெரிய கண்மாய் கானூர் கண்மாய் தான், மடப்புரம் அம்மா மஹால் பின்புறம் வைகை ஆற்றில் விவசாயிகளால் ஏற்படுத்தி இருந்த தண்ணீர் வரும் பாதையை பொதுப்பணித்துறை நிர்வாகம் வெட்டி விட்டதால் கானூர் கண்மாய், பெத்தானேந்தல் கண்மாய், சடங்கி கண்மாய், கருங்குளம் கண்மாய் தண்ணீர் செல்லாத அவல நிலை. ஏற்பட்டுள்ளது.
பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் முறையிட்டும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகள் பல லட்சம் செலவழிக்கும் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீர் செல்லும் பாதையை சேதப்படுத்திய பொதுப்பணித் நிர்வாகத்தை கரையே அடைத்துக் கொடுக்க சொல்லி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இல்லை என்றால் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.