பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க மேயர் கம்பரசம்பேட்டையில் ஆய்வு.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கம்பரசம்பேட்டை தலைமை நீர் பணி நிலையத்தில் புதிதாக 250 எம்.எம். விட்டமுள்ள ஆழ்துளை கிணறுகள் ஆறு எண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் பொறியாளர்களுடன்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 65 வார்டு பகுதிகளில் தினந்தோறும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது .பெரியார் நகர் ,அய்யாளம்மன் படித்துறை, கொள்ளிடம் போன்ற பகுதிகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால் குடிநீர் உந்து நிலையங்களில் குடிநீர் குறைவாக வருகிறது எனவே, கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிநடைபெற்று வருவதை விரைந்து முடிக்குமாறும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கவும் அறிவுரை வழங்கினார்.

ஆய்வில் செயற்பொறியாளர்திரு கே எஸ் பாலசுப்பிரமணியன்,ஒப்பந்ததாரர் திரு. ஸ்டாலின் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்