பண்டிகை கால சீட்டு நடத்தி மோசடி. திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்.
பண்டிகை கால சீட்டு நடத்தி மோசடி. திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்.
திருச்சி பாலக்கரை வேர் ஹவுஸ் பகுதியில் ஒரு சிட் பண்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது.இதில் பாலக்கரை, மல்லிகைபுரம், எடத்தெரு, செந்தண்ணீர்புரம், முதலியார் சத்திரம், கூனி பஜார், துரைசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தீபாவளி,பொங்கல், ரம்ஜான், அட்சய திருதியை போன்ற பண்டிகைக்கால சீட்டுகளுக்கு பணம் செலுத்தி வந்தனர்.
இந்த நிறுவனம் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை சீட்டு பணம் வசூல் செய்துள்ளனர். அந்த வகையில் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று செந்தில், ஆனந்த் ,கனகராஜ் உள்ளிட்டவர்கள் தலைமையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இந்த முற்றுகை போராட்டத்தால் பாலக்கரை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.