நள்ளிரவில் திடீர், திடீரென தீப்பிடித்து எரியும் கடை, குடிசை வீடுகள் – கிராம மக்கள் பீதி.

நள்ளிரவில் திடீர், திடீரென தீப்பிடித்து எரியும் கடை, குடிசை வீடுகள் – கிராம மக்கள் பீதி.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக நள்ளிரவில் குடிசை வீடுகள் திடீர், திடீரென தீப்பிடித்து எரிகிறது. மாடுகளுக்கு தீவனத்திற்காக வைத்திருந்த வைக்கோல் போர்களும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. இதுவரை 5 குடிசை வீடுகள், 3 வைக்கோல் போர்கள் தீக்கிரையாகியுள்ளன.

வீடுகளுக்கும், வைக்கோல் போர்களுக்கும் யாரேனும் தீ வைத்து எரிக்கிறார்களா?, எதற்காக வீடுகள் பற்றி எரிகிறது? என்பது குறித்து தெரியாமல் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுபற்றி அந்த பகுதி மக்கள் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்