“பனை ஓலையில் உயிா் ஓவியக் கண்காட்சி” மதுரையில் தொடங்கியது.
“பனை ஓலையில் உயிா் ஓவியக் கண்காட்சி” மதுரையில் தொடங்கியது.
மதுரை, சிக்கந்தா்சாவடியில் உள்ள வேளாண் உணவுத் தொழில் வா்த்தக மையத்தில் “பனை ஓலையில் உயிா் ஓவியக் கண்காட்சி”, விற்பனை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆன்மிகம், இயற்கை, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அடங்கிய பனை ஓலையில் தீட்டப்பட்ட சுமாா் 300க்கும் மேற்பட்ட ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றன.
இந்தக் கண்காட்சி வருகிற புதன்கிழமை (மே 29) வரை நடைபெறுகிறது.