சவூதியில் உம்ரா குழுவினர் பயணித்த பேருந்து தீப்பிடித்து 40 யாத்ரீகர்கள் மரணம்!
சவூதியில் உம்ரா குழுவினர் பயணித்த பேருந்து தீப்பிடித்து 40 யாத்ரீகர்கள் மரணம்!
மக்காவில் யாத்திரையை முடித்துக்கொண்டு மதீனாவுக்குச் செல்லும் வழியில் பத்ருக்கும் மதீனாவுக்கும் இடையில் உள்ள முஃபர்ரஹாத் என்ற இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. உம்ரா பேருந்து, ஒரு டேங்கருடன் மோதியதில் தீப்பிடித்தது. பேருந்தில் பயணித்த 43 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்களில் 20 பேர் பெண்கள் மற்றும் 11 பேர் குழந்தைகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியதாகத் தெரிகிறது. உயிர் தப்பியவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சவூதி நேரப்படி இரவு 11 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணி) இந்த விபத்து நடந்துள்ளது. பேருந்தில் இருந்த யாத்ரீகர்கள் அனைவரும் ஹைதராபாத்வாசிகள் என்பதை உம்ரா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.