வடமதுரை அருகே வாலிபர் மர்ம மரணம். போலிசார் விசாரணை.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் to எரியோடு செல்லும் சாலையில் செட்டிகளத்தூர் ரைஸ் மில் அருகே சாலையின் ஓரத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.
சம்பவ இடத்தில் வடமதுரை போலீசார் இறந்து கிடக்கும் நபர் யார்? என்றும் வாகனம் மோதி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்