கணவன் கண் முன் சுய இ..பத்தில் ஈடுபட்ட 32 வயது பெண்.. நூதன முறையில் கணவன் கொடுத்த தண்டனை.. அலறிய போலீஸ்..
கணவன் கண் முன் சுய இ..பத்தில் ஈடுபட்ட 32 வயது பெண்.. நூதன முறையில் கணவன் கொடுத்த தண்டனை.. அலறிய போலீஸ்..
கொல்கத்தா மெடினிபூர் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று காவல்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது. ஒரு இளம் தம்பதியின் வாழ்க்கையில் ஏற்பட்ட உறவு முறிவும், அதைத் தொடர்ந்து நடந்த பழிவாங்கல் செயலும் இப்போது சட்டத்தின் முன் வந்துள்ளது.
சுபாஷ் முகர்ஜி என்ற இளைஞர் தங்கம்-வெள்ளி நகைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவரது மனைவி அனன்யா. திருமணம் ஆன சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. அனன்யா தனது கல்லூரி நண்பரான ரஞ்சித் பட்டாச்சார்ஜியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், விவாகரத்து வேண்டுமென்றும் பலமுறை சுபாஷிடம் கேட்டிருக்கிறார்.
சுபாஷின் குடும்பத்தினர் இதற்கு உடன்படவில்லை. அனன்யாவின் பெற்றோரும் “என்ன நடந்தாலும் எங்கள் வீட்டுக்கு மீண்டும் வர வேண்டாம்” என்று தெளிவாகக் கூறிவிட்டனர். ஆனால் ரஞ்சித்தின் குடும்பத்தினர், முறையான விவாகரத்து ஆவணம் கொண்டு வந்தால் அவளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் அனன்யா பலமுறை வீட்டை விட்டு வெளியேறி ரஞ்சித்துடன் தங்கி வந்தார். ஒவ்வொரு முறையும் ரஞ்சித்தின் பெற்றோர் அவளிடம் “முறையாக விவாகரத்து செய்த பிறகுதான் திருமணம் நடக்கும். அதிகபட்சம் ஆறு மாத அவகாசம்” என்று அறிவுரை கூறியிருக்கின்றனர். இதை ஏற்றுக்கொண்ட அனன்யா, தன் கணவரை மனரீதியாக பாதிக்கும் வகையில் பல செயல்களில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, கணவர் உறவுக்கு அழைக்கும்போதெல்லாம் மறுத்துவிட்டு, ஆன்லைனில் வாங்கிய மசாஜ் கருவியைப் பயன்படுத்தி தனியாக இன்பம் தேடும் நிலைக்குச் சென்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் கணவன் முன்னிலையிலேயே அந்தக் கருவியைப் பயன்படுத்தி அவரை வேண்டுமென்றே தொந்தரவு செய்யத் தொடங்கியிருக்கிறார்.
இதைக் கவனித்த சுபாஷ், தனது தொழிலில் பயன்படுத்தப்படும் வெங்காரம் (போராக்ஸ்) என்ற பொருளை அந்த மசாஜ் கருவியில் கரைத்து தடவி வைத்திருக்கிறார். அனன்யா இதை அறியாமல் மீண்டும் அந்தக் கருவியைப் பயன்படுத்தியபோது, உடனடியாக கடுமையான எரிச்சலும் வலியும் ஏற்பட்டது. அவர் துடித்துக்கொண்டிருக்கும் நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்து, இது வேதிப்பொருள் தொடர்பான காயம் என்பதை உறுதிசெய்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அனன்யா “இதற்கு என் கணவர்தான் காரணம்” என்று கூறினார். ஆனால் அதற்கு முன்பே சுபாஷ் தானாகவே காவல் நிலையம் சென்று சரணடைந்து, தான் செய்த செயலை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
விசாரணையில் மேற்கண்ட அனைத்து விவரங்களும் வெளிவந்துள்ளன. காவல்துறை சுபாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மேலும் விவரங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.