டார்ச் லைட் வெளிச்சத்தை கொண்டு பல உயிர்களை காப்பாற்றிய வயதான தம்பதியினருக்கு முதல்வர் வெகுமதி.
டார்ச் லைட் வெளிச்சத்தை கொண்டு பல உயிர்களை காப்பாற்றிய வயதான தம்பதியினருக்கு முதல்வர் வெகுமதி.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து நடந்த போது, அதைக் கண்ட இந்த வயதான தம்பதியினர், உடனடியாக கையில் இருந்த டார்ச் லைட்டை வைத்து ஓடிச் சென்று அந்த வழியாக வந்த கொல்லம் மெயில் வண்டியை எச்சரிக்கை செய்து நிறுத்தினர்.
இரவு நேரத்திலும் ரயிலில் செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகளை காக்க துணிச்சலுடன் செயல்பட்ட இந்தத் தெக்கத்தி தம்பதியினருக்கு ₹5 லட்சம் வெகுமதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.