போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி திடீர் மாயம். போலீசார் விசாரணை.
போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி திடீர் மாயம். போலீசார் விசாரணை.
திருச்சி பால்பண்ணை தஞ்சை மெயின் ரோடு மகாலட்சுமி நகர், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். போலீஸ் இன்ஸ்பெக்டர் .இவரது மனைவி சித்ராதேவி (வயது 40). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற சித்ராதேவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து சித்ரா தேவியின் சகோதரர் சரவணகுமார் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு மாயமான சித்ராதேவியை தேடி வருகிறார்.