132 ஆண்டுகளுக்குப் பிறகு… ஸ்காட்டிஷ் கலங்கரை விளக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆச்சர்ய பாட்டில்!

132 ஆண்டுகளுக்குப் பிறகு… ஸ்காட்டிஷ் கலங்கரை விளக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆச்சர்ய பாட்டில்!

அதிசயங்களும் ஆச்சரியங்களும் இந்த உலகத்தில் நிரம்பி இருக்கிறது. அப்படியான ஒரு ஆச்சரியமான பொருளொன்று, ஸ்காட்டிஷ் கலங்கரை விளக்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது என்ன? பார்க்கலாம்…

ஸ்காட்டிஷ் கலங்கரை விளக்கத்தில் சுமார் 132 ஆண்டுகளுக்கு (1892-ல்) முன்பு உபயோகப்படுத்தப்பட்ட ஒரு காற்றுப்புகா பாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே, ஸ்காட்டிஷ் கலங்கரை விளக்கத்தை கட்டிய பொறியாளர்களின் பெயர்கள் மற்றும் அந்த கலங்கரை விளக்கத்தை காவல்காத்தவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது.

இந்த பாட்டிலானது கோர்ஸ்வால் கலங்கரை விளக்கத்தின் சுவர்களுக்குள் இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. அந்த பாட்டிலை கைப்பற்றியவர்கள் அதனுள் இருந்த பேப்பரை எடுத்துப் பார்க்கையில், அந்த எழுத்தானது குயில் மையால் எழுதப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அதை பத்திரமாக சுவர்களுக்கு இடையில் யாரோ மறைத்து வைத்திருந்ததாகவும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

எதற்காக இவர்கள் இந்த பெயரை எழுதி பாட்டினினுள் அடைத்து வைத்துள்ளனர், அதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்