மதுரை மாவட்டம்  கருமாத்தூரில் வேன் மோதியதில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு.

மதுரை மாவட்டம்  கருமாத்தூரில் வேன் மோதியதில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு.

மதுரை: கரு​மாத்​தூரில் இருசக்கர வாக​னம் மீது வேன் மோதி​ய​தில் குழந்தை உட்பட 3 பேர் உயி​ரிழந்​தனர். மதுரை மாவட்​டம் செக்​கானூரணி அரு​கே​யுள்ள கரு​மாத்​தூரைச் சேர்ந்​தவர் ஓட்​டுநர் ராஜகுரு (27). இவரது அண்​ணன் மகள் பிரமிளா (6). இவருக்கு நேற்று முன்​தினம் இரவில் திடீரென உடல்​நலம் பாதிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, பிரமிளா யை இருசக்கர வாக​னத்​தில் ராஜகுரு மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றார். உதவிக்​காக பக்​கத்து வீட்​டைச் சேர்ந்த சங்​கீ​தா​வும் (28) உடன் சென்​றார்.

மதுரை – தேனி பிர​தான சாலை​யில் கரு​மாத்​தூர் – கோவி​லாங்​குளம் விலக்கு அருகே வளை​வில் திரும்​பிய வேன் ஒன்​று, எதிர்​பா​ராத​வித​மாக இருசக்கர வாக​னம் மீது மோதி​யது. இதில் தூக்கி வீசப்​பட்ட 3 பேரும் படு​காயமடைந்​தனர்.

அரு​கி​லிருந்​தவர்​கள் அவர்​களை மீட்​டு, மதுரை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். செல்​லும் வழி​யிலேயே ராஜகுரு உயி​ரிழந்​தார்.

மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பலனின்றி பிரமிளா, சங்​கீதா ஆகியோர் உயி​ரிழந்​தனர். விபத்து தொடர்​பாக செக்​கானூரணி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, வேன் ஓட்​டுநர் குறவக்​குடி பாண்டி (43) என்​பவரைத் தேடி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்